மியூகோர்மைகோசிஸ் (mucormycosis) எனும் இந்த அரிய தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் 50 சதவிகிதம் பேர் உயிரிழக்கின்றனர். உயிர் பிழைக்கும் சிலருக்கு ஒரு கண் அகற்றப்படுகிறது.
மிகவும் அரிதாக உண்டாகும் இந்த மியூகோர்மைகோசிஸ் தொற்று பாதிப்பு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த பல்லாயிரம் பேருக்கு சமீப மாதங்களாக இந்தியாவில் உண்டாகி வருகிறது.
கோவிட்-19 தொற்றைக் குணப்படுத்த பயன்படுத்தப்படும் ஸ்டீராய்டு (ஊக்க மருந்து) மருந்துகள் மற்றும் கருப்பு பூஞ்சை தாக்குதல் பாதிப்பு ஆகியவற்றுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்து கூடுதலாக உள்ளது.