கொரோனா வைரஸின் 2வது அலை இந்தியாவில் பரவத் தொடங்கி தற்போது சரியத் தொடங்கி உள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்தாலும், பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் நாளை முதல் தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமல் படுத்தப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த முழு ஊரடங்கு நாட்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள 044 22253884 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு சார்பில் வேளாண் துறை அறிவித்துள்ளது.