கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து கொல்கத்தா மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒத்தி வைக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாயின. அதனைத் தொடர்ந்து போட்டியை தொடர்ந்து நடத்துவது குறித்து விவாதங்கள் எழுந்தன.
தற்போது அதிகாரபூர்வமாக ஐபிஎல் அமைப்பு, இந்த 2021 ஆண்டுக்கான போட்டிகளை காலவரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதை ஏஎன்ஐ முகமை அதன் ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்து இருக்கிறது.