இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அனாயாச வாள்சுழற்றியான ரவீந்திர ஜடேஜா வேகப்பந்து வீச்சுக்கு மாறினால் மட்டுமே இந்திய அணியில் எனக்கும் குல்தீப் யாதவுக்கும் இடம் கிடைக்குமென மற்றொரு ஸ்பின்னர் யஜுவேந்திர சகால் தெரிவித்துள்ளார்.
இந்திய ஒருநாள் மற்றும் டி20 போட்டி அணிகளிலிருந்து அஸ்வின் தேவையில்லாமல் ஓரங்கட்டப்பட்டார், ஜடேஜாவையும் ஓரங்கட்டப்பார்த்தனர், ஆனால் அவர் தனது ஆல்ரவுண்ட் திறமைகளினால் தன்னை அப்படியெல்லாம் ஒதுக்கி விட முடியாது என்பதை நிரூபித்து வருகிறார்.