தமிழகத்திற்கு தேவையான அளவுக்கு மருத்துவ ஆக்ஸிஜன் சப்ளை மத்திய அரசு வழங்காததால், ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க பல இடங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை அமைக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அதற்கு உதவ பல தனியார் நிறுவனங்கள் முன் வந்துள்ளன.
அதன் வரிசையில், ராமசாமி ராஜா நகரில் உள்ள ராம்கோ சிமெண்ட்ஸ் தொழிற்சாலையில் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தொடர்ந்து ஆக்ஸிஜன் வழங்குவதற்காக இந்த ஆலை அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது.